விழுப்புரம் : வானுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் இறந்தார்.வானுார் தாலுகா, தென்சிறுவளூரை சேர்ந்தவர் சுரேஷ், 38; இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக தனது பைக்கில் சென்றார். மொளசூர் அருகே சென்றபோது, சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், என்பவர் ஓட்டிவந்த கார், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின்பேரில், அரிகிருஷ்ணன் மீது கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE