புதுச்சேரி : கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி சுப்பையா சாலையில், பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர், வீரபாகுதேவர், வள்ளி தேவசேனா சமேத கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில், 68 வது ஆண்டு கந்தர் சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக, சிறப்பு பூஜைகள் நடந்தது. வரும் 18ம் தேதி, இரவு 8:00 மணிக்கு யானைமுகன் சம்ஹாரம், 19 ம் தேதி, சக்திவேல் வாங்குதலும், சிங்கமுகன் சம்ஹாரம், 20 ம் தேதி காலை தேர் திருவிழாவும், இரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.
வரும் 21ம் தேதி காலை 7:45 மணிக்கு திருக்கல்யாணமும், 24ம் தேதி தீர்த்தவாரி, 28 ம் தேதி இரவு 8:00 மணிக்கு முத்து பல்லக்கு சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 29ம் தேதி கார்த்திகை தீபம், டிசம்பர் 1ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 2ம் தேதி வீரபாகு, சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE