சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் நேற்று முன் தினம் விட்டு, விட்டு கன மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் நேற்று முன் தினம் பகலில் விட்டு,விட்டு கன மழை பெய்தது. கல்வராயன்மலையில் பெய்த கன மழை காரணமாக மணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால் நேற்று காலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE