கொடுங்கையூர் : தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட, சிறுவர்கள் இருவரை கைது செய்த போலீசார், ஐந்து டூ - வீலர்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை, கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், வடிவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி, 42, கடந்த, 7ம் தேதி, வீட்டின் முன், தன் இரு சக்கர வாகனத்தைநிறுத்தி, மறுநாள் காலையில் பார்த்தபோது காணவில்லை.இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, 17 வயதுடைய, இரு சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்கள், கொடுங்கையூர், திரு.வி.க., நகர், சுற்றுவட்டார பகுதிகளில், டூ - வீலர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், ஐந்து இரு சக்கர வாகனங்கள், இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.விசாரணைக்கு பின், இருவரும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE