சென்னை : துபாயிலிருந்து கடத்தவரப்பட்ட தங்கம் மற்றும் சென்னையிலிருந்து, துபாய்க்கு கடத்த முயன்ற, அமெரிக்கா டாலர்களை, 49 லட்சம் ரூபாய் மதிப்பில், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு நாடான - யு.ஏ.இ.,யின், துபாய் நகரலிருந்து , 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 2:05 மணிக்கு, சென்னை வந்தது. அதில் வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த, ஷேக் அப்துல்லா, 25, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, முகமது ரிபாத், 36, ஆகிய இருவரையும், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அதில், இருவரது ஆசனவாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 800 கிராம் தங்க கட்டிகள், 41.56 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், சென்னையிலிருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 9:40 மணிக்கு, துபாய் செல்ல தயாராக இருந்தது.அதில் செல்ல வந்த, சென்னையைச் சேர்ந்த, நாகூர் மீரான், 54, என்பவரை சோதனையிட்ட போது, அவரது உடைமைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, அமெரிக்கா நாட்டு டாலர்கள், இந்தியா மதிப்பில், 7.35 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE