பள்ளிக்கரணை : பெரும்பாக்கத்தில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில், இரு பெண்கள் உட்பட, 11 பேருக்கு, அரிவாள் வெட்டு விழுந்தது.
பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், கஞ்சா விற்பனையில், இரண்டு கோஷ்டிகள் செயல்பட்டு வந்தன. கடந்த மாதம் நடந்த மோதலில், இரு தரப்பைச் சேர்ந்த, எட்டு பேரை, பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், கஞ்சா விற்பனையில் மீண்டும் மோதல் நடந்தது. இதில், விக்டோரியா, 35, அமலா, 38, உள்ளிட்ட, 11 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பள்ளிக்கரணை போலீசார், பிரதீப், 25, உள்ளிட்ட, 15 பேரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE