சேலம்: தீபாவளியன்று, ஐப்பசி அமாவாசை என்பதால் கறி விற்பனை, போதிய அளவில் இல்லை. இன்று, கார்த்திகை பிறந்த நிலையில், ஐப்பசி கடைசி ஞாயிறான நேற்று, சேலம் உள்பட முக்கிய நகரங்களில் உள்ள கறி, கோழி, மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியதால், விற்பனை களை கட்டியது. விற்பனை அதிகரிக்க, ஆடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கறி விலையை, கிலோவுக்கு, 100 ரூபாய் வியாபாரிகள் உயர்த்தினர். செம்மறி ஆட்டுக்கறி கிலோ, 600 முதல், 650 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 650 முதல், 700 ரூபாயாக உயர்ந்தது. வெள்ளாட்டுக்கறி கிலோ, 700க்கு விற்றது, 800 ரூபாயாக உயர்ந்தது. அதேபோல், கோழி விலை, கிலோவுக்கு, 20 முதல், 100 ரூபாய், மீன் விலை, கிலோவுக்கு, 20 முதல், 150 ரூபாய் வரை உயர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE