கோபி: பஞ்சாயத்து தூய்மை பணியாளரை தாக்கி, கொலை முயற்சி செய்தவரை, திங்களூர் போலீசார் தேடி வருகின்றனர். திங்களூர் அருகே கருக்குப்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி, 36; கருக்குப்பாளையம் பஞ்சாயத்து தூய்மை பணியாளர். கடந்த, 10ல், அதே பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது, கோபால், 50, என்பவர், தகராறு செய்து தாக்கினார். மண்வெட்டியை எடுத்து கொண்டு, துரத்தி, குச்சியால் தாக்கி, கொல்ல முயன்றதாக, திங்களூர் போலீசில் திருமூர்த்தி புகாரளித்தார். இதன்படி வழக்குப்பதிந்த போலீசார், கோபாலை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE