புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி டாஸ்மாக் கடை அருகே, முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக, சகோதரர் புகார் தந்துள்ளார். புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலை, பொன்னம்பாளையம், டாஸ்மாக் கடை அருகே, நேற்று காலை, 75 வயது முதியவர் இறந்து கிடந்தார். புன்செய்புளியம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், புன்செய்புளியம்பட்டியை அடுத்த பாச்சாமல்லனூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம், 77, என தெரிந்தது. குடும்பத்தினரை அழைத்து விசாரித்து உறுதி செய்தனர். இந்நிலையில், இறந்த முதியவரின் தலை மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால், நடவடிக்கை எடுக்குமாறு, அவரது சகோதரர் செல்வராஜ், புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE