பொம்மிடி: பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், ராணுவ வீரர் தவற விட்ட, சூட்கேஸ்சில் இருந்த, 35 பவுன் நகை, அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பொம்மியம்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு, ராணுவ வீரர், திரிபுராவில் பணிபுரிந்து வரும் அவர், விடுமுறையில் நேற்று முன்தினம், சென்னை - கோவை இன்டர்சிட்டி சிறப்பு ரயிலில், ஊருக்கு வந்துள்ளார். பொம்மிடி ஸ்டேஷனில் இறங்கி, வீட்டிற்கு சென்றபோது, அவர் கொண்டு வந்த சூட்கேஸ்சை பிளாட்பாரத்தில் தவறுதலாக விட்டுச் சென்றுள்ளார். அதில், 35 பவுன் நகை மற்றும் பொருட்கள் இருந்துள்ளன. கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்சை, ரயில்வே போலீசார் மீட்டு, ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், வீட்டிற்கு சென்ற பின், சூட்கேஸ்சை தவற விட்டதை நினைத்து, தென்னரசு அதிர்ச்சியடைந்தார். பின், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த அவர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் நடந்ததை கூறினார். இதையடுத்து நேற்று அந்த சூட்கேஸ், தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE