தர்மபுரி: தீபாவளியில், தடை செய்த குட்கா மற்றும் மது பதுக்கி விற்ற, 367 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6,012 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தீபாவளியன்று, மாவட்ட எஸ்.பி., பிரவேஸ்குமார் உத்தரவின்படி, அந்தந்த ஸ்டேஷன் எல்லையில், போலீசார் அதிரடியாக மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத்தில், மதுவை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த, தர்மபுரி கோட்டத்தில், 69; பென்னாகரம், 56; பாலக்கோடு, 64; அரூரில், 98 மற்றும் மதுவிலக்கு பிரிவில், 80 பேர் என, 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து, 6,012 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அரசு தடை செய்த குட்கா விற்ற, 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE