கிருஷ்ணகிரி: மத்தூரில் பணியிலிருந்த, தலைமைக்காவலர் மாரடைப்பால் மரணமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ராஜ்ஸ்டீபன், 50; தற்போது, ரோந்து பணி மொபைல் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். தீபாவளியையொட்டி, நேற்று முன்தினம் இரவு, ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை, 2:30 மணிக்கு அவருக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவருடனிருந்த போலீசார், அவரை உடனே திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடலை, திருப்பத்தூரிலுள்ள, அவரது வீட்டிற்கு போலீசார் கொண்டு சென்றனர். ராஜ்ஸ்டீபன், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மத்தூருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு கீதா, 41, என்ற மனைவியும், ஷாலினி, 21, என்ற மகளும், நவீன்குமார், 18, என்ற மகனும் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE