வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் டவுன் பஞ்., தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில், போலீசாருக்கு இணையாக தூய்மை பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றினர். இதனால், வெண்ணந்தூர் டவுன் பஞ்., தூய்மை பணியாளர்களுக்கு, போலீசார் சார்பில் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை வழங்கினர். அதேபோல், கடந்த சிலநாட்களாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தீபாவளி பரிசு, வாழ்த்துகளை இன்ஸ்பெக்டர் தெரிவித்து கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE