ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, பட்டணம் டவுன் பஞ்., குச்சிக்காடு பகுதியில் அருந்ததியர் சமுதாயம் சார்பில், மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அறிவுத் திருக்கோவில் கட்டப்படுகிறது. அப்பணியை, தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி பார்வையிட்டார். மேலும், அருந்ததியர் சமுதாயத்திற்கு, தி.மு.க., ஆட்சியில் வழங்கிய, 3 சதவீதம உள் இட ஒதுக்கீட்டில் பயனடைந்த மாணவர்கள், இளைஞர்களின் நன்றி கூறும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அறிவுத்திருக்கோவிலுக்கு நிலம் தந்த பேரூர் செயலாளர் பொன் நல்லதம்பி, மாணவ, மாணவியருக்கு, உதயநிதி நினைவு பரிசு வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் இளமதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதிவேந்தன், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE