நாமக்கல்: உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில், நீரிழிவு நோயை தடுக்கும் மற்றும் நிர்வகிப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பிலான, இணையவழி கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடந்தது. கருத்தரங்கை, கல்லூரி முதல்வர் முருகன் துவக்கி வைத்தார். மத்திய சித்த ஆராய்ச்சி குழும அலுவலர் மருத்துவர் ஆர்த்தி, 'நீரிழிவு நோயை தடுக்கும் மற்றும் நிர்வகிப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு' என்ற தலைப்பில் நோயை கட்டுப்படுத்தும் மற்றும் வராமல் தடுக்கும் மூலிகைகளின் குணம் குறித்து பேசினார். ஏற்பாடுகளை, தாவரவியல் துறை உதவி பேராசிரியரும், கல்லூரி செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலருமான சந்திரசேகரன் செய்திருந்தார். பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பட்ட வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE