நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 190 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து கடைகளிலும், மது விற்பனை சூடு பிடித்தது. இது குறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், சாதாரண நாட்களில், மூன்று கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், ஒரு கோடி ரூபாய் உயர்ந்து, நான்கு கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனையாகும். தீபாவளி பண்டிகை அன்று, மாவட்டம் முழுவதும், 6.30 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. அதேபோல் கடந்த, 13ல், 6.20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களில், 12.50 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE