குளித்தலை: நச்சலூர் பஸ் ஸ்டாண்டில், மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர். குளித்தலை அடுத்த, நங்கவரம் பஞ்.. நச்சலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், சிமென்ட் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் கடை முன் தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் கடைக்கு வர முடியாத அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தேங்கிய தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு தொற்று நோய்கள் பரவ காரணமாகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தேங்கிய மழை தண்ணீரை வெளியேற்றி, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என, டவுன் பஞ்.. நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE