கரூர்: பயணிகள் அதிகமாக வந்து செல்லும், கரூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு கழிவறை மட்டுமே உள்ளதால், பயணிகள் சிரமப்படுகின்றனர். கரூர், பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோவை, நாகை, கடலூர், கன்னியாகுமரி வரை, பல மாவட்டங்களுக்கு, ஏராளமான பஸ்கள் செல்கின்றன. அது மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு இவ்வழியாக இரவில், அதிக பஸ்கள் செல்கின்றன. அதிகளவில் பயணிகள் வந்து செல்லும், நெருக்கடி மிக்க கரூர் பஸ் ஸ்டாண்டில், நகராட்சி சார்பில் ஆண், பெண் இலவச சிறுநீர் கழிப்பிடம் தலா ஒன்று மட்டுமே உள்ளது. இதனால், இயற்கை உபாதைகளுக்கு கழிவறையை தேடும் பயணிகள், இருக்கும் ஒரே கழிவறைக்காக ஏராளமானோர் காத்திருக்க வேண்டி நிலை ஏற்படுகிறது. மேலும், கூட்டம் அதிகமாக இருப்பதால், கழிவறையை சரியாக சுத்தம் செய்வதில்லை. இதனால், கழிவறையை பயன்படுத்தும் பயணிகள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, நவீனமாக இலவச கழிவறை ஒன்றை கட்டித்தர வேண்டும் என,பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE