குளித்தலை: நங்கவரத்தில், சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்.. தெற்குப்பட்டி சந்தையில், 1 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் உள்ளது. நங்கவரம் சுற்றுப்பகுதி, ஏழை குடும்பத்தை சேர்ந்த இல்ல நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் குறைந்த கட்டணத்தில் செய்து கொள்ளும் வகையில், சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கலெக்டர் மலர்விழிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE