சென்னை: 'வீட்டுக்கடன் நிதி நிறுவனங்களுக்கு, ஏழு மாதங்களில், 33 ஆயிரத்து, 293 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது' என, தேசிய வீட்டுவசதி வங்கி அறிவித்துள்ளது.பொதுத்துறை வங்கிகள் சார்பில், வீட்டுக்கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், தனியார் வீட்டுவசதி நிதி நிறுவனங்களும், மக்களுக்கும், வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. இந்நிறுவனங்களுக்கு, தேசிய வீட்டுவசதி வங்கி வாயிலாக, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெறும் நிதியை, வீட்டுவசதி வங்கிகள், மக்களுக்கு வீட்டு கடன்களை முறையாக வழங்க வேண்டும்.கொரோனா தொற்று காரணமாக, நடப்பு நிதி ஆண்டில், வீட்டுக்கடன் பணிகள் தொய்வடைந்தன. மக்கள் வீட்டுக்கடன் பெறுவதில் சிக்கல் இருக்கக்கூடாது என்பதால், வீட்டுவசதி நிறுவனங்களுக்கு, சிறப்பு சலுகைகளுடன் கூடுதல் கடன் வழங்கப்பட்டது.இந்த வகையில், மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான ஏழு மாதங்களில், 33 ஆயிரத்து, 293 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என, தேசிய வீட்டுவசதி வங்கி அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE