புதுடில்லி: டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 3,235 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 4.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,614 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் டில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‛டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE