டேராடூன்: கேதார்நாத் கோவில் சென்றிருந்த உத்தர்கண்ட், மற்றும் உ.பி.மாநில முதல்வர்கள் 8 மணி நேர கடும் பனிபொழிவு காரணமாக திரும்ப முடியாமல் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமயமலை மாநிலங்களில் ஒன்றான, உத்தர்கண்டில் இம்மாதம் கடுங்குளிர் காலம் என்பதால் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இதனால், பிரசித்தி பெற்ற, கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி கோவில்களை பனி சூழ்ந்துள்ளது. இதையடுத்து நேற்று கோவில் மூடப்பட்டது.

இங்கு தரிசனம் செய்ய வந்திருந்த உத்தர்காண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இரு முதல்வர்களும், தரிசனம் செய்துவிட்டு பத்ரிநாத் செல்ல சென்றிருந்த திட்டமிட்டிருந்தனர். திடீரென பனிபொழிவு அதிகமானதால், அங்கு இருவரும் சிக்கியுள்ளதாக உத்தர்காண்ட் மாநில சட்டம்,ஒழுங்கு டி.ஜி.பி. அசோக் குமார் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். உ.பி. முதல்வர் அலுவலகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE