செங்கல்பட்டு : திருத்தேரியில், லாரி மோதியதில், திருமணமான இரண்டு மாதங்களில், தம்பதி இறந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த, காட்டுசெல்லுார் கிராமத்தைச் சேர்ந்த ராமர், 25. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், நதியா, 22, என்பவருக்கும், இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள், தாம்பரத்தில் வசித்து வந்தனர்.தீபாவளி பண்டிகைக்கு, மனைவியுடன், 'ஹீரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், சொந்த ஊர் சென்றார்.பண்டிகை முடிந்து, காட்டு செல்லுாரிலிருந்து, தாம்பரத்திற்கு, அதே வாகனத்தில், மனைவியுடன் வந்தார்.செங்கல்பட்டு அடுத்த, திருத்தேரி அருகில், காலை, 8:00 மணிக்கு, பின்னால் வந்த லாரி, ராமர் வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த தம்பதி, அதே இடத்திலேயே இறந்தனர்.தகவலறிந்து வந்த மறைமலை நகர் போலீசார், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE