புதுமாவிலங்கை : புதுமாவிலங்கை ஊராட்சியில், கட்டி முடிக்கப்பட்டு, 16 ஆண்டுகளாகியும், அடிப்படை வசதிகள் இல்லாததால், சமுதாயக்கூடம் வீணாகி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, புதுமாவிலங்கை ஊராட்சி. கடம்பத்துார் -- பேரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊராட்சியில், 2004ம் ஆண்டு, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், மத்திய அரசின் உலக சர்வதேச தொழிலாளர் அமைப்பு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையத்துடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.இந்த கட்டடத்தில், அடிப்படை வசதிகளான, மின்சாரம், குடிநீர், கழிப்பறை போன்ற எவ்வித வசதிகளும் இல்லாமலேயே, சமுதாயக்கூடம் திறப்பு விழா நடத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் சமுதாயக்கூடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், சமுதாயக்கூடம் இருந்தும், சுபநிகழ்ச்சிகளுக்காக தனியார் மண்டபத்திற்கு செல்வதால், பணம் மற்றும் கால விரயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சமுதாயக் கூடத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE