சென்னை:திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 90 ஆயிரத்து, 500 பயனாளிகளுக்கு தலா, 8 கிராம் தங்க நாணயம் வழங்குவதற்காக, 362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும், ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு, தலா, 8 கிராம் தங்க நாணயம் மற்றும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.அந்த வகையில், நடப்பாண்டு, 90 ஆயிரத்து, 500 பயனாளிகளுக்கு, இத்திட்டத்தின் கீழ், தாலிக்கு தங்கம் வழங்குவதற்காக, தலா, 8 கிராம் எடையுள்ள, தங்க நாணயம், 90 ஆயிரத்து, 500 வாங்க, 362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில், 22 காரட் தங்க நாணயங்கள் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க, டிச., 14 கடைசி நாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE