கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி நால்ரோட்டில் மின் விளக்குகள் எரியாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.கருமத்தம்பட்டி நால்ரோட்டில் மேம்பாலம் உள்ளது. அவிநாசி ரோட்டின் இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இந்த ரோட்டில் மின் விளக்குகள் உள்ளன. சில மாதங்களாக இந்த மின் விளக்குகள் இரவில் முறையாக எரியாததால், அவ்வழியே செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர்கருமத்தம்பட்டி பகுதி மக்கள் கூறுகையில், 'நால்ரோட்டின் தென்புறம் உள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக கருமத்தம்பட்டி புதூர் மக்கள் சென்று வருகின்றனர். ரோட்டில் பல மின் விளக்குகள், உயர் மின் கோபுர விளக்கு உள்ளது. இரவில் விளக்குகள் எரியாததால், அப்பகுதி முழுக்க இருள் சூழ்ந்துள்ளது. வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டால் வெளிச்சம் சுத்தமாக இருக்காது. பெண்கள், சிறுவர்கள் செல்ல அச்சப்பட வேண்டி உள்ளது. இதேபோல் வடக்குப்பகுதியிலும் உள்ளது. ரோட்டை பராமரிக்கும் தனியார் நிறுவனம் மின் விளக்குகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE