அன்னுார்:அன்னுாரில் இரண்டாவது நாளாக நேற்றும், மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில், பல மாவட்டங்களில், ஒரு வாரமாக மழை பெய்த போதும், அன்னுார் வட்டாரத்தில், மழை பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில், அரை மணி நேர கனமழையும், இரண்டரை மணி நேரம் தூறல் மழையும் பெய்தது. நேற்று மாலை 4:30 மணிக்குத் துவங்கி, 5:30 மணிவரை, ஒரு மணி நேரம் மழை பெய்தது. மழையால், விவசாயிகள், பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் அன்னுார் வட்டாரத்தில் உள்ள குளங்களுக்கு மழை நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE