ஓசூர்:ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது இரு மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் சாப்ஜான், 75; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது முதல் மனைவிக்கு முகபூப், 52, என்ற மகனும், இரண்டாவது மனைவிக்கு, பஷீர், 42, அமீர், 40, நசீர், 38, என மூன்று மகன்களும் உள்ளனர். சொத்தை, பாகம் பிரித்து வழங்குவதில், இரண்டாவது மனைவியின் மகன்களுக்கும், சாப்ஜானுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த, சாப்ஜானை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.விசாரணையில், மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரிந்தது.
பாகலுார் போலீசார், சாப்ஜானின் மகன்கள் அமீர், நசீர் தலைமறைவாக உள்ளதால், அவர்கள் சொத்து தகராறு காரணமாக தந்தையை கொலை செய்தார்களா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. கொலை நடந்த பகுதியில், 'சிசிடிவி' கேமரா காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளதால், அதன் மூலம் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான இரு மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE