விழுப்புரம் : ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, நிதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் புகழேந்தி தலைமையில் கொடுத்துள்ள மனு;தமிழக அரசு ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியம் மே மாதம் முதல் இன்றைய தேதி வரை வழங்கவில்லை. இந்த நிதியில் தான் மக்களுக்கு தேவையான முக்கிய அடிப்படை வசதிகள் தெருவிளக்கு பராமரிப்பு பணி, குடிநீர் பணி, பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது, விழுப்புரம் மாவட்டம் மக்கள் பிரதிநிதி இல்லாத காரணத்தால் ஊராட்சியின் நிர்வாகத்தை ஊராட்சி செயலாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் மக்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஊராட்சியில் நிதி இல்லாமல் மக்களின் அடிப்படை பிரச்னைகளை சரிசெய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும், பல ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், ஊராட்சி செயலர்கள் பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளது.எனவே, ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தேவையான நிதியை வழங்கவோ அல்லது பொது நிதியில் செலவினம் மேற்கொள்ள பி.டி.ஓ.,க்களுக்கு உத்தரவிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE