அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டை கடைவீதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட குழு குமார் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை உயர்த்தி தரவும், வேலை வாய்ப்பு, தேசிய அடையாள அட்டை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு முகாம்களை மீண்டும் நடத்தவேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட குழு ஷரீப், வட்ட தலைவர் குமார், வட்ட செயலாளர் ஏழுமலை , ரங்கநாதன், சகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE