உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் இரண்டு பைக்குகளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த குமார் நகரைச் சேர்ந்தவர் பொன்னையன் மகன் செல்லபெருமாள், 35; ஹாலோ பிளாக் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஹாலோ பிளாக் கொட்டகையில் 2 பைக்குகளை நிறுத்தி விட்டு துாங்கினார்.
இரவு 1:00 மணியளவில் குமார் திடீரென எழுந்து பார்த்தபோது கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைக்குகளும் எரிந்து கருகிய நிலையில் இருந்தது.தகவலறிந்த உளுந்துார் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து பைக்குகளை எரித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE