மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு மீனவர் தெருவில் சிமென்ட் சாலையில் போடப்பட்ட கழிவு சேற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு மீனவர் தெருவில் ஊராட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை போடப்பட்டது. அப்போது வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்பட்டது.கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சில மாதங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்தனர். அப்போது கால்வாயில் உள்ள கழிவு மண்ணை அகற்றி சிமென்ட் சாலையில் கொட்டினர்.
பின்னர் அவற்றை அப்புறப்படுத்தவில்லை. தற்போது இப்பகுதியில் பெய்து வரும் மழையால் கழிவு மண் கரைந்து சிமென்ட் சாலை முழுவதும் பரவி சேறும் சகதியமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாலையில் உள்ள சேற்றை அப்புறபடுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE