சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஒழுகும் அரசு டவுன் பஸ்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் சங்கராபுரம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.சங்கராபுரம் பணிமனையிலிருந்து மஞ்சபுத்துார், முக்கனுார், செல்லம்பட்டு, ஏந்தல் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பஸ்களின் மேற்கூறைகள் பழுதாகியுள்ளன. தற்போது சங்கராபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பஸ்களின் உள்ளே மழைநீர் ஒழுகுகிறது.
இதனால், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பஸ்களின் மேற்கூரைகளை சரி செய்து மழைக் காலங்களில் பயணிகள் சங்கடமின்றி பயணம் செய்ய போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE