பாலக்காடு:ரயிலில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த இருவர், கைது செய்யப் பட்டனர்.பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, கேரள மாநிலம், பாலக்காடு ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையில் இருந்து செல்லும், 'ஆலப்புழா எக்ஸ்பிரஸ்' ரயிலில் வந்து இறங்கிய இருவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், 2 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் எவ்வித ஆவணங்கள் இன்றி, மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.
விசாரணையில் திருச்சூரைச் சேர்ந்த ஜோய், 49, பாலக்காடு ஆலத்துாரை சேர்ந்த விஜயன் 36, என தெரிந்தது. சென்னையில் இருந்து தங்கம் கடத்தி செல்வதாக தெரிவித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இருவரும் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE