திருப்பூர்:ஊராட்சி தலைவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் தொடர்பான அடிப்படை பயிற்சி முகாம், பவானி சாகர் பயிற்சி நிலையத்தில் துவங்கியுள்ளது.ஒவ்வொரு குழுவுக்கும், ஐந்து நாட்கள் உண்டு, உறைவிட பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒன்றியம் வாரியாக, தலா, 15 ஊராட்சி தலைவர்கள் குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும், ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சி) சந்திரகுமார் கூறுகையில், ''ஊராட்சி நிர்வாகம் தொடர்பான அடிப்படை பயிற்சி, பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் துவங்கியுள்ளது.ஊராட்சி தலைவர்கள், அங்கேயே தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE