கடலுார் : உச்சிமேடு பகுதியில் மழை காரணமாக வீடு இடிந்து பாதித்த குடும்பத்தினருக்கு, கடலுார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்.
கடலுார் மாவட்டம் முழுவதும் கடந்த 13ம் தேதி முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன மழையால், கடலுார் அடுத்த உச்சிமேடு கிராமத்தில் நாகப்பன், ராதாகிருஷ்ணன் ஆகியோரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதையறிந்த கடலுார் ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார்.
இடிந்த வீடுகளுக்கு பதிலாக பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஊராட்சி தலைவர்கள் மாறன், காந்தாமணி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.கடலுார் அடுத்த குண்டு உப்பலவாடி, கங்கணாங்குப்பம், உச்சிமேடு உள்ளிட்ட கிராமங்களில் மழையால் தண்ணீர் தேங்கி, சேதமான பகுதிகளையும் பார்வையிட்டு தண்ணீர் வடிய தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE