வடலுார் : சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த, ஆடூர் அகரம், நடுத்தெருவை சேர்ந்தவர், தினகரன் மகன் தாய்மொழியன், 21; டிப்ளமோ படித்தவர். கடந்த, 12ம் தேதி, தனது உறவினரை அழைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வடலுார் நோக்கி சென்றார்.அப்போது கரூரில் இருந்து கடலுார் நோக்கி வந்த, மாருதி ஸ்விப்ட் கார் (டி.என்-47, டி.2121) பைக் மீது மோதியது. காயமடைந்த தாய்மொழியன் புதுச்சேரி, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE