சிதம்பரம் : சிதம்பரம் அண்ணா குளம் அளவீடு பணிக்கு சென்ற வருவாய் துறையினரை அப்பகுதி மக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் வாய்க்கால் மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்டெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. சிதம்பரம் நகரில் உள்ள 8 க்கும் மேற்பட்ட குளங்களில் இதுவரை 3 குளங்களை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, துார் வாரப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரின் முக்கிய குளமான அண்ணா குளத்தை தாசில்தார் ஆனந்த் தலைமையில் வருவாய் துறையினர் அளவீடு செய்யும் பணிக்காக சென்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு குளம் அளவீடு பணியை தடுத்து நிறுத்தியதோடு, எங்களுக்கு வேறு இடம் கொடுத்து விட்டு அளவீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து அப்பகுதியினர் சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலனை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறும் பணி. இதனை தடுக்க முடியாது. உங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி பரிசீலனை செய்வதாக கூறினார். அதனை தொடர்ந்து இன்று குளம் அளவீடு பணி நடைபெறும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE