குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அருகே கிராம துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகிறது.
குறிஞ்சிப்பாடியை அடுத்த, பெத்தநாயக்கன்குப்பம் ஊராட்சியில், 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். இவர்களுக்கு கிராம துணை சுகாதார நிலையம் ஒன்று அதே பகுதியில் இயங்கி வருகிறது. பிரதி புதன்கிழமைகளில் இப்பகுதியை சேர்ந் தோர் சிகிச்சை பெற்று கொள்ளும் வகையில், மருத்துவர் சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கிறார்.இந்த துணை சுகாதார நிலையம் தற்போது முறையான பராமரிப்பின்றி சிதலமடையும் நிலையில் உள்ளது.
மதில் சுற்றுச்சுவர் விழுந்து, கட்டங்கள் பழுதாகி, புதர் மண்டி பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது.இதனால், இங்கு சிகிச்சை பெற முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அச்ச உணர்வுடன் சென்று வருகின்றனர். மேலும், கனமழை பெய்தால் கட்டடம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் இருப்பதாக பெத்தநாயக்கன்குப்பம் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.எனவே, துணை சுகாதார நிலையத்தை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு, சீரமைத்து தர போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE