அனுப்பர்பாளையம்:ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் பெருமாநல்லூரில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அவ்வகையில், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், காளிபாளையம், ஆகிய 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் சந்திரகுமார், துவக்கி வைத்தார். திருப்பூர் பி.டி.ஓ., மணிகண்டன், மண்டல துனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்துமதி, நவமணி, தீபா பயிற்சி அளித்தனர். மொத்தமுள்ள, 43 பேரில், 37 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE