கடலுார் : டில்லி லோக்சபா முற்றுகை போராட்டத்தை ஆதரித்து, கடலுார் மாவட்டத்தில் வரும் 26, 27 தேதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலுார் மாவட்ட குழு கூட்டம் கடலுார் எஸ்.எம் நினைவகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுப்ரமணியன், செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கோமுகி அணையில் இருந்து வரும் தண்ணீரை தடுத்து உருவாக்கப்படும் கை கான் வளைவு திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.மத்திய அசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். மின் துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 26, 27ம் தேதிகளில் லோக்சபா முன்பாக விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இதனை ஆதரித்து கடலுார் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE