வேப்பூர் : வேப்பூரில் காங்., மனித உரிமைகள் துறை சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.
காங்., மனித உரிமைகள் துறை மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலர்கள் காமராஜ், விஜயகுமார், நல்லூர் வட்டார தலைவர் பிரபு, மகளிரணி நிர்வாகி நிவேதா முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மணி, நிர்வாகிகள் ராமசாமி, ஜெய்கணேஷ், தெய்வபிரகாசம் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பலர் காங்., மனித உரிமைகள் துறையில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE