அனுப்பர்பாளையம்,:தொழிலாளியை கொலை செய்த அவரின் மனைவி, மாமியார், மைத்துனர்களை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், பி.என்., ரோடு, கூத்தம்பாளையம் ஏ.பி., நகரை சேர்ந்தவர் காளி, 23, கட்டட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜனனி, 19, என்பவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.தம்பதியருக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, காளியை, ஜனனி, அவரின் தாய் ஜோதி, மகன்கள் பிரசாந்த், மணிகண்டன் ஆகியோர் தாக்கியதில், அவர் இறந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE