இடுக்கி:கேரளா குமுளி அருகே ஏலத்தோட்ட தொழிலாளி சஜீவனை 55 கொலை செய்த தேனிமாவட்டம் கூடலுார் பாலகிருஷ்ணன் 30 அவரது மனைவி சாந்தி 29 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் குமுளி அருகே ஒட்டகதலமேட்டில் வாடகை வீட்டில் தங்கி பாலகிருஷ்ணன் மனைவி சாந்தி ஏலத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். பாலகிருஷ்ணன் வீட்டில் சக தொழிலாளி சஜீவன் நவ.13 இரவு மது குடித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது பாலகிருஷ்ணன் அவரை கம்பால் தாக்கியதுடன் சேலையால் கழுத்தை இறுக்கினார்.
பின்னர் போதையில் துாங்கியவர் மறுநாள் காலை கண் விழித்தபோது சஜீவன் இறந்தது தெரிந்தது. அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கணவன்மனைவி நாடகமாடினர்.கோட்டயம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடைபெற்ற சஜீவன் உடல்பிரேத பரிசோதனையில் அவர் கொலை உறுதி செய்யப்பட்டதால் குமுளி இன்ஸ்பெக்டர் ஜோபின்ஆன்டணி தலைமையில் போலீசார் கணவன் மனைவியை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE