திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், காலியாக உள்ள, 27 அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, நேர்காணல் நடந்து வருகிறது.பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள் உட்பட, 3,502 பேர் விண்ணப்பித்தவர். தகுதியானவர்களுக்கு, நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டது. பல்லடம் ரோட்டில் உள்ள, வேளாண் விற்பனை சங்க வளாகத்தில், கடந்த, 16ம் தேதி முதல், நேர்காணல் நடந்து வருகிறது.கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குமார் கூறுகையில், ''மொத்தம், 27 அலுவலக உதவியாளர் பணிக்கு, 3,502 பேர் விண்ணப்பித்தனர்.அவர்களுக்கான நேர்காணல், துவங்கியுள்ளது. தகுதியானவர்களைதேர்வு செய்து, விரைவில் நியமன ஆணை வழங்கப்படும்,''என்றார்.தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வருவதால், பல்லடம் ரோடு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசல் ஏற்படாத வகையில், போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE