திருப்பூர்:திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் மரக்கன்றுகளை நீதிபதி வைத்தியநாதன் நட்டு வைத்தார்.திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம் கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. பணிகளை பார்வையிட, திருப்பூர் மாவட்ட நீதித்துறை பொறுப்பு நீதிபதி வைத்தியநாதன் நேற்று வந்தார்.ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் மரக்கன்றுகளை நீதிபதி வைத்தியநாதன் நட்டு வைத்தார்.பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.முன்னதாக, மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி மற்றும் நீதிபதிகள், கோர்ட் அலுவலர்கள், அவரை வரவேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE