சென்னை:'பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை 11ம் வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்' என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் போது சில தலைமை ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை செப். 30ல் முடிந்து விட்டது என தெரிவித்துள்ளனர்.
இக்கல்வியாண்டில் சிறப்பு நிகழ்வாக 10ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது அவர்களை பள்ளியில் சேர்க்கும்படி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE