திருப்பூர்:காங்கயத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.வீரணம்பாளையம் ஊராட்சி, சாம்பவலசு பகுதியில் இரு நாட்களாக பெய்த மழையில், அப்பகுதியை சேர்ந்த பழனியம்மாள், லட்சுமி ஆகியோரது ஓட்டு வீடு நேற்று மதியம் இடிந்து விழுந்தது.வீட்டில் யாரும் இல்லாததால், குடும்பத்தினர் தப்பினர். ஆர்.ஐ., கனகராஜ் உட்பட அலுவலர் நேரில் சென்று விசாரித்தார்.மின் இணைப்பு துண்டிப்புபொங்கலுார் வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ய துவங்கிய உடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று மதியம் சிறிது நேரம் மின் இணைப்பு வழங்கப்பட்டது.நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மின் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது. மழை துாறல் ஆரம்பித்தாலே மின் இணைப்பை மின் வாரியம் துண்டித்து விடுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE