கோவை:தீபாவளிக்கு ஊருக்கு சென்ற ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி, இன்ஜினியர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.பீளமேடு, ஏர்போர்ட் அருகிலுள்ள பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ்,71. ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான இவர், தீபாவளிக்கு முன்தினம், வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு, குடும்பத்துடன் சென்றார்.நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. எதுவும் திருட்டு போகவில்லை.இதே போல், கோவை கணபதி மாநகரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் செந்தில்நாத்,36, கடந்த 12ம் தேதி, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றார். திரும்பி வந்த பார்த்த போது, பூட்டு உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இரு சம்பவங்கள் குறித்தும், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE