கோவை:கோவையில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கி விட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை, மாநகராட்சி மேற்கொள்கிறது.முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து வசித்தவர்களில், 1,092 குடும்பத்தினர் வீட்டை காலி செய்தனர். அவ்வீடுகளை அகற்றும் பணியில், கடந்த ஜூன் மாதம், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் துவக்கினர்.சிலர், ஒதுக்கீடு பெற்றும், வீட்டை காலி செய்யாமல் இருக்கின்றனர். சிலர் இன்னமும் ஒதுக்கீடு பெறாமல் உள்ளனர். 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை செய்வதற்கு, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிக் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி நேற்று மீண்டும் துவங்கியது. மொத்தம், 28 வீடுகள் இடிக்கப்பட்டன; 24 வீடுகளுக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE